சட்டமன்றத்தில் இன்று திருமகன் ஈவெராவுக்கு இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

சட்டமன்றத்தில் இன்று திருமகன் ஈவெராவுக்கு இரங்கல்

சென்னை, ஜன. 10- சட்ட மன்றத்தில் இன்று (10.1.2023) சட்டமன்றப் பேரவை திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நிகழ்வு ஒத்தி வைக்கப்பட் டது.

இன்று (10.1.2023) சட் டமன்ற பேரவைக் கூட் டம் காலை 10 மணிக்கு கூடியதும் பேரவைத் தலை வர் மு.அப்பாவு அவர் கள் மறைவுற்ற தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரபல திரைப் பட வசனகர்த்தா ஆரூர் தாஸ், தமிழறிஞர் முனை வர் அவ்வை நடராஜன், பிரபல ஓவியர் எழுத்தா ளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறு பான்மையினர் ஆணை யத் துணைத் தலைவர் மருத்துவர் டி.மஸ்தான், பிரபல கால்பந்து விளை யாட்டு வீரர் பீலே, நடப்பு சட்டமன்றப் பேரவை உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா ஆகியோர் மறைவு குறித்து இரங்கற் குறிப்பு கள் வாசித்து மறைவுற்ற உறுப்பினர்களின் குடும் பத்தாருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெரு மக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர் களும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மறைவுற்ற உறுப்பினர்க ளுக்கு மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பேரவை நிகழ்வு கள் இன்று ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

No comments:

Post a Comment