ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 10.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சனவரி 18இல் கம்மம் நகரில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் துவக்கியுள்ள பாரத் ராஷ்டிர சமிதியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டில்லி, பஞ்சாப், ஜார்கண்ட், கேரள மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கடந்த 5 ஆண்டுகளில், புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 79% உயர் ஜாதி, எஸ்சி மற்றும் சிறுபான்மையினர் தலா 2%. பாஜக எம்பி சுஷில் மோடி தலைமையிலான குழு முன்பு இது தொடர்பாக அமைச்சகத்தின் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது.

* மாநில அரசு இயந்திரம் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் என்றும், அதே நேரத்தில் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சேர்க்க முடியும் என்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் புஜ்பால், முதலமைச்சர் ஷிண்டேக்கு எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தண்ணீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட கழிவுகள் மனித மலம் தானா என்பதை உறுதி செய்வதற்காக சென்னை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அய்ஜி கார்த்திகேயன் கூறினார்.

தி இந்து:

* நிர்வாகத்திற்கான நிர்வாக, நலன் மற்றும் புள்ளியியல் மேலாண்மையின் சுமூகமான திட்டமிடல் மற்றும் செயலாக் கத்திற்கான இவை மற்றும் பிற கட்டாயங்களைக் கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்கு வதில் ஒன்றிய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்கிறது இந்து தலையங்கம்.

* டிசம்பர் 1, 2022 நிலவரப்படி, நாடு முழுவதும் 18 மண்டலங்களில் 3.12 லட்சம் அரசிதழ் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்திய ரயில்வே ஊழி யர்கள் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது. இதை ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்  மாநிலங்களவையில் தெரிவித்தார்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment