நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும்- சரத்பவார் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும்- சரத்பவார் பேட்டி

மும்பை, ஜன. 9- நாடாளு மன்ற, சட்டமன்ற தேர்த லில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். 

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவ ரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந் தது. தற்போது மராட்டி யத்தில் பா.ஜனதா ஆதர வுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் அடுத்து நடைபெற உள்ள நாடா ளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது குறித்து கோலாப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறிய தாவது:- 

காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் பால்தாக்கரே சிவ சேனா வருகிற நாடாளு மன்ற, சட்டமன்ற தேர் தலை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற புரிதல் உள்ளது. குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சேர்க்கப்படும். இது தொடர்பான ஆலோச னைகள் நடந்து வருகி றது. பல விவகாரங்களில் நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். எனவே எந்த பிரச்சினை யும் இல்லை. சிவசேனா உடைந்து உள்ள போதும், பெரும்பான்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக உள்ளனர். பிளவின் போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் ஷிண்டே அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது மக்களின் மன நிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 

மராட்டிய- கருநாடக எல்லை பிரச்சினை தொடர் பாக முதல் அமைச்சர் ஏக் நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளுடனும் ஆலோ சனை நடத்தினார். எல்லை பிரச்சினை தற் போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கை மூத்த சட்ட வல்லுநர் களை வைத்து நமது தரப்பு வாதத்தை பலமாக முன்வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment