முன்னதாக, கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்ட மன்ற இடைத் தேர்தலில் எங்களுடைய கூட்ட ணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து இருக் கிறது. ஒத்த கருத்து டையவர்கள் பல்வேறு மேடைகளில் இருந்தாலும், அவர்களை எல்லாம், ஒரே மேடைக்கு அழைத்து வந்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முடிவு செய்து, தமிழ் நாட்டில் அந்தப் பணிகளை செய்திருக்கிறார்கள்.
எங்களுடைய மேடைக்கு கமல்ஹாசன் வந்திருக் கிறார். அவரை வரவேற்கி றோம். அவருடைய இயக்கத் தின் ஆதரவு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும். ஈரோடு கிழக்குத் தொகுதி யில் களத்தில் நாங்கள் பணி யாற்று கிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக் கிறது.
ஈரோட்டில் எங்களு டைய தோழமைக் கட்சிக ளின் தோழர்கள் பம் பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஈரோட்டில் தேடி, தேடி பார்க் கிறோம். எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை. எனக்கு ஆச்சரிய மாக இருக்கிறது. அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்க மாக பேசுகிறார்கள். இந்த தேர் தல் அவர் களுக்கு ரொம்ப படிப் பினையைத் தந்திருக் கிறது என்று கருதுகிறேன்.
நாங்கள் களத்தில் மகத்தான வெற்றியை பெறு வோம். எங்கள் வேட்பாளர் ஈ.வெ. கி.ச.இளங்கோவன் சிறந் தவர். அவர் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment