Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
January 03, 2023 • Viduthalai

 3.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசின் பணமதிப்பிழப்பு  நடவடிக்கையின் வழிமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிப்பு குறித்து தீர்ப்பளிக்க வில்லை என காங்கிரஸ் கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பணமதிப்பிழப்பு செய்தது சட்டவிரோதமானது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பில் நீதிபதி பி.ஆர்.கவாயின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பணமதிப்பிழப்பு செய்தது தவறு. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சரியான பாதையை கடைப்பிடிக்கவில்லை. ரிசர்வ் வங்கியும் அதை ஆமோதிக்கும் வகையில் செயல் பட்டு உள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

* 2024 இல் பாஜக மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டால், இயல்பிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தியா என்ற கருத்தை ஒருங்கிணைக்கும். இன்று, பிஜேபி தனது எதிரிகள் மீது அரசியல் உட்பொருளை திணிக்க தயாராக உள்ளது, இந்த பயிற்சி முடிந்ததும், கற்பனையான அரச மைப்பு ஜனநாயகத்தில் இருந்து இந்தியாவை பெரும் பான்மைவாத ஆட்சியாக மாற்றுவது முழுமையடையும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் சுகாஸ் பல்சிகார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2024 தேர்தலுக்கு முன்னதாக ஹிந்தி பேசும் மய்யப்பகுதியில் ஓபிசி ஒருங்கிணைப்பின் வாய்ப்பு பாஜகவுக்கு கவலை அளிக்கிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைப்பதற்காக பாடுபடப் போவதாக அவர் அறிவித்திருப்பது பாஜகவிற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

* ஓபிசி இட ஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உ.பி அரசின் மனுவை ஜனவரி 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மோடி அரசின் தவறான கொள்கையால் 2022இல், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த பட்சம் ஆறு உயர் தேவையுள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு டிசம்பர் 29 அன்று முடிவடைந்தது. இடங்களை மாநில அரசுக்கு திருப்பி தரவில்லை.

- குடந்தை கருணா 


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn