130 முறை குருதிக்கொடை வழங்கிய கழகத் தோழர் ராஜா சிதம்பரம் மறைவு-நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

130 முறை குருதிக்கொடை வழங்கிய கழகத் தோழர் ராஜா சிதம்பரம் மறைவு-நினைவேந்தல்

நெய்வேலி, ஜன. 3- நெய்வேலி நகரியம் கழக இளைஞர் அணி செயலாளராகவும் சீரிய செயல்வீரராகவும் நெய்வேலி குருதி கொடை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் இதுவரை 130 குருதிக் கொடை வழங்கிய கொள்கை வீரருமான ராஜா சிதம் பரம் (வயது 50) 31.12.2022 அன்று மறைவுற்றார். 

மேனாள் கடலூர் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் செந் தமிழ் செல்வியின் மகன் மற்றும் கழக காப்பாளர் வெ.ஜெயராமன், வெ.ஞானசேகரன்,

வெ.ராவணன் ஆகியோரின் சகோதரி மகன் ஆவார் அவருக்கு இறுதி நிகழ்ச்சி 1.1.2023 மாலை 5 மணி அளவில் நெய்வேலி நகரம் வட்டம் 25 வடக்கு சதுரங்க தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன், மாவட்ட செய லாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மண்டல இளைஞர் அணி செயலா ளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் ராமநாதன், நெய் வேலி நகரத் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ரத்தின சபாபதி, ஞான சேகரன், வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவ ணன் ஆகியோர் கழகத் தின் சார்பில் மாலையிட்டு வீரவணக்கம் தெரிவித்த னர்.

அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தொழிற் சங்க தோழர்களும் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தினர். இரங்கல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற் றது. தொமுச தலைவர் திருமாவளவன், ஓ.பி.சி. தலைவர் புருஷோத்தமன், எஸ்.சி.எஸ்.டி. சங்க பொருளாளர் மேனாள் நகர திமுக செயலாளர் புகழேந்தி, பக்கிரி சாமி, எஸ்.எம்.இ. ஆபரேட்டர் சங்க தலைவர் சந்திரன், நெய்வேலி குருதிக்கொடை இயக்க நிர்வாகி குரு நாதன், தன்னார்வ குரு திக் கொடை இயக்க உடல் கொடை இயக்க நிர்வாகி சிதம்பரம் ராமச்சந்திரன், தொமுச பொருளாளர் அய்யப்பன், மாவட்ட தலைவர் தண்டபாணி, இரா.மாணிக்கவேல், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரை யன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். இறுதி ஊர்வலத்தில் ஏராள மான மக்கள் கலந்து கொண்டனர். நெய்வேலி நகரம் சாந்திவனத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment