பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாச்சாரம் சித்தராமையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாச்சாரம் சித்தராமையா

 மங்களூரு ஜன 24 உடுப்பியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் சித் தராமைய்யா ஊடகவியலாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

பொய் சொல்வது பா.ஜனதா வின் கலாச் சாரம். பயங்கரவாதத்தை நாங்கள் எப்போதும் எதிர்க்கி றோம். பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஹிந் துத்வா என்ற பெயரில் பொய் சொல்பவர் களையும், மதவா தத்தை முன் வைப்பவர்களையும் பார்த்தால் கோபம் வருகிறது. 

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். எங்களுக்கு அனைவரும் சமம் தான். ஹிந்துவும், ஹிந்துத்வாவும் முற்றிலும் வேறுபட்டவை. ஹிந் துத்வா வார்த்தையை கண்டு பிடித்தவர் சாவர்க்கர். பா.ஜனதாவுக்கு வளர்ச்சியில் நம் பிக்கை இல்லை. வளர்ச்சி பற்றி பேச வேண்டாம், 'லவ் ஜிகாத்' பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று நளின்குமார் கட்டீல் கூறி உள்ளார். ஏழை மக்களின் வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. பா.ஜனதா ஆட்சியில் இருந்தால் கட லோரப் பகுதி மட்டுமின்றி கருநாடகம், ஏன் இந்தியா முழு வதும் வளர்ச்சி அடையாது.  மோடி இந்தியாவின் பிரதமர். அவர் எப்போது வேண்டுமானா லும் கருநாடகத்தில் சுற்றுப் பயணம் செய்யலாம். ஆனால் அவர் பா.ஜனதாவை கருநாடகத் தில் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று சொன்னால் அது சாத்தியமற்றது. மோடி, அமித்ஷா 100 முறை வந்தாலும் பா.ஜனதாவை மீண்டும் ஆட் சிக்கு கொண்டு வர முடியாது. பா.ஜனதாவால் மக்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர். மேற்கு வங்களத் திலும் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பிரச்சாரம் செய் தனர். அங்கு அவர்களுக்கு என்ன ஆனது? அதே கதி தான் கருநா டகத்திலும் ஏற்படும்.  

கருநாடகத்தில் 130 இடங் களில் காங்கிரஸ் வெற்றி பெறும். கடந்த சட்டசபை தேர்தலில் உடுப்பியில் ஒரு இடங் களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்த முறை 3 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். தட்சிண கன்னடா வில் உள்ள 

8 தொகுதிகளில் குறைந்தது 

5 தொகுதிகளில் வெற்றி பெறு வோம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment