குமரி, டிச. 19- குமரி மாவட் டத்தில் உள்ள பெரும் பாலான பள்ளிகளில் பெரியார் சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் வகையிலும், அறிவியல் சிந்தனைகளை பரப்பும் வகையிலும் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி தக் கலை அமலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள் ளியில் நடந்தது. ஏராள மான மாணவர்கள் பங் கேற்றனர். மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரை யாற்றினார் .
மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர், பெரியார் தாஸ், முத்து வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், நிகழ்ச்சியினை ஒருங்கி ணைத்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதாணு கருத்துரையாற்றினார். மாணவ மாணவியர்க ளுக்கு பெரியாருடைய நூல்கள், மற்றும் அறிவி யல் நூல்கள் வழங்கப் பட்டன.
No comments:
Post a Comment