"பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட மண்ணில் ஊடுருவ முடியாது" - வைகோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

"பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட மண்ணில் ஊடுருவ முடியாது" - வைகோ

திருநெல்வேலி,  டிச.29 “பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட மண்ணில் ஊடு ருவ முடியாது” என்று வைகோ கூறினார். நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ எம்.பி.  செய்தியாளர் களிடம் கூறியதாவது:- 

இந்திய உபகண்டத்தில் பல்வேறு மத, மொழி, தேசிய இன அடையாளங்கள் உள்ளன. இவை அனைத்தையும் புல் டோசர் கொண்டு நொறுக்கி விட்டு இந் துத்துவா கொள்கையை மட்டும் நிலை நாட்ட வேண்டும் என்று பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப் பும் முயன்று வரு கின்றன. இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு சிதைந்து விடும். மத ஒற்றுமைக்கு ஆபத்தாக பிர தமர் நரேந்திரமோடி அரசு இயங்குகிறது. இதனை எதிர்த்துப் போராடும் பெரும் சக்தியாக தமிழ்நாடு திகழ்கிறது. '

திராவிட மாடல்' ஆட்சியை நடத் தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் மற்றும் அனைத்து மத நம்பிக்கை களுக்கும் இடம் கொடுத்து சமத் துவத்தை நிலைநாட்டும் முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் 'திராவிட மாடல்' ஒற்றுமை கோட்பாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நிலை ஏற்பட்டே தீரும். தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. 

2024-ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இதே கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட இயக்க மண்ணில் ஊடுருவ முடியாது. சேது சமுத்திர திட்டம் தேவை என்பதை அன்றே பேரறிஞர் அண்ணா சொன் னார். நானும் அதற்காக பலகட்ட போராட்டம் நடத்தி இருக்கிறேன். தென்னாட்டு வளர்ச்சிக்கும், இந்தியா வின் வளர்ச்சிக்கும், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கும் சேது சமுத்திர திட்டம் வழிவகை செய்யும். எனவே அது மிகவும் அவசியம். செண்பகவல்லி அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுகுறித்து நான் பலமுறை கேரள முதல்அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள் ளேன். அந்த அணை மூலம் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளில் விவசாயம் செழிக் கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment