தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள்

சென்னை, டிச.29, 2023ஆம் ஆண்டு தொடக்க நாளான டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத் துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு வாகனச் சோதனை பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினரின் சோதனை  நடை பெறும். எனவே, நள்ளிரவு, இரு சக்கர வாகனங் களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட் டங்களில் ஈடுபடக் கூடாது. மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப் படுவர், அவர்களின் வாகன மும் பறிமுதல் செய்யப்படும். அதிவேக மாகவும், கவனக் குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். விபத்துக் களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக் கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்.

இரு சக்கர வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்ப வர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப் பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார் கள். அதற்காக இரவு முழு வதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறந் திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.   

வழிபாட்டுத் தலங்களுக்கு காவல் துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளை விக்க முனைவோர் கைது செய்யப்படு வார்கள். வெளியூர்களுக்கு செல்பவர் கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்ட ருகில் காவல் ரோந்து ஏற் பாடு செய்யப் படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல் துறையின் அனைத்து நிபந்தனைகளை யும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப் படுவார்கள். 

இரு சக்கர வாகன பந்தயம் உள் ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடு கின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறை யினர் அறிவுறுத்தப்பட்டிருக் கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற தொலைபேசி எண்ணில்   தெரிவிக்கலாம். பொது மக்களின் இரக சியம் காக்கப்படும். 

கட்டணமில்லா தகவல் தரும் அவசர உதவி தேவைப்படு பவர்கள் ‘காவல் உதவி’ என்ற அதி காரப்பூர்வ செயலியை பயன் படுத் துமாறும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். அதற்கு ‘காவல் உதவி’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட் டுக்கொள்கிறோம். அசம்பாவிதம் இல்லாத, விபத் தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழ்நாடு காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment