சென்னை,டிச.27- தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகம் பாலன் இல்லம், சென்னை தியாகராயர் நகரில் 24.12.2022 அன்று காலை 10 மணியளவில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சென்னை மாவட்டச் செயலாளர்கள் ப.கருணாநிதி, எஸ்.கே.சிவா, த.கு.வெங்கடேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழாக்கம் செய்து விடுதலை பத்திரிகையில் வெளியிட்டது, சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்காக பெரியார் பாடுபட்டது. வைக்கத்தில் தந்தை பெரியார், தோழர்.ப.ஜீவானந்தம் இணைந்து போராடியது, நாகை கே.முரு கேசன், ஏ.எஸ்.கே.அய்யங்கார் உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் பெரியாரின் அரசியல் தொடர்புகள் குறித்தும் நினைவு கூரப் பட்டது.
No comments:
Post a Comment