ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்

ஒசூர்,டிச.19-திராவிடர் கழகம் சார்பில் ஓசூர் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் தலைமையில் நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீர வணக்க பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி தொடக்கவுரையாற்ற, தலைமை கழக பேச்சாளர் அண்ணா சரவணன் சிறப்புரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பொதுக் குழு உறுப்பினர் அ.செ. செல்வம் திராவிட தொழி லாளரணி மாவட்ட தலைவர் தி.பாலகிருஷ் ணன், செயலாளர் 

பா.வெற்றிசெல்வன், மகளிர்பாசறை செயலா ளர் கிருபா, திராவிட சிட்டி மூமென்ட் அபி கவுடா, வழக்குரைஞர் ஆஃப்ரிடி, பிபாகரன், தமிழ்நாட்டு கல்வி இயக் கம் ஒப்புரவாளன், மாண வர் கழக வாசு, விசு மற் றும் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment