சென்னை, டிச. 12. செங்கம் அடுத்த பாய்ச் சல் கிராமத்தில் 11ஆம் நூற்றாண்டில் கோயிலுக்கு கொடை வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள் ளதாக செங்கண்மா வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரேம் ஆனந்த் கூறியதா வது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் கிரா மத்தில், கண்ணக்குருக்கை செல்லும் சாலையில் உள்ள வேப்ப மரத்தடி யில் கல்வெட்டு இருந்தது. இதை படியேற்றம் செய்து ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டது. இதில், 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீர ராஜேந்திர சோழர் கால கல்வெட்டு என்பது தெரியவருகிறது. கோயிலுக்கு கொடை யாக நிலம் வழங்கியது குறித்து குறிப்பிடப்பட் டுள்ளது. இக்கல்வெட் டில், “ஸ்வஸ்தி வீர ராஜேந்திர சோழ தெவர்கு யாண்டு ஆவது பெண்ணை வடகரை வாணகபாடி ஆடை நாட்டு நல்லூர்... கயா திரு வாலீசுரமுடையார்" எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 11ஆம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழர் காலத்தில் வாலீஸ்வர முடையார் என்ற கோயி லுக்கு கொடையாக நிலம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கல்வெட் டின் மேற்பரப்பில் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துக்களில் பெண் ணை வடகரை என்பது தென்பெண்ணை ஆற்றின் வடகரைப் பகுதியாகும். ஆடைநாடு என்பது ஆடையூர் நாடாகும். திருவண்ணா மலை, செங்கம் பகுதியை உள்ள டக்கியதாகும். வாணகபாடி என்பது திருக்கோவிலூரை குறிப்பதாகும். பாய்ச்சல் மற்றும் கண்ணகுருக்கை கிராமங்களில் வாலீ ஸ்வ ரமுடையார் கோயில் இருந்திருக்கலாம். கண்ணகுருக்கை கிராமத்தில் சிவாலயம் அழிந்து கிடக்கிறது. தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண் டால், இக்கோயிலை பற்றி வரலாறு கிடைக்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment