தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, டிச.21, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வ தற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நேற்று (20-.12.-2022) காலை சட்டப் பேரவைத் தலைவர் அறையில் நடை பெற்றது.இக்கூட்டத்தில், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கலந்து கொண்டார். இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் க்ஷி.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ராஜ இளங்கோவும், கண்ணதாசனும் நியமனம் ஆகியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை கடந்த 1997ஆம் ஆண்டு அப்போதைய முதல மைச்சர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலிப் பணியிடங்கள் விரை வில் நிரப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் இப்போது 2 புதிய உறுபினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment