நாகை மாவட்டம் திருப்புகலூர் மானமிகு சண்முகசுந்தரம் என்ற பெரியார் முரசு அவர்கள் 16.12.2022 அன்று மறைவுற்றார் என்ற துயர செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றோம்.
அந்த வட்டாரத்தில் இயக்கப் பணிகளை மிகச் சிறப்பாக செய்தவர். கல்வித் தொண் டையும் மேற்கொண்டவர்.
அவர் பிரிவால் வருந்தும் அவரது வாழ்விணை யருக்கும், அருமைச் செல்வங்களுக்கும், கழகத் தோழர் களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
17.12.2022

No comments:
Post a Comment