பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து 'நீங்கள்தான் குடிகாரர்கள்' என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து 'நீங்கள்தான் குடிகாரர்கள்' என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டம்!

பாட்னா,டிச.15- பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் சப்ரா பகுதியில் அண் மையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தொடர்பாக, சட்டப்பேரவையில் நேற்று (14.12.2022) பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் பேர வையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

பாஜக மூத்த தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான விஜய் குமார் சின்கா அப்போது பேசும் போது, “2016 முதல் பீகார் மாநிலத்தில் மது விற்பனை, மது நுகர்வுக்குத் தடை உள்ளது. இதனால் மாநிலம் முழு வதும் கள்ளச்சாராயம் பெருகி விட் டது. கள்ளச்சாராயம் குடித்து அடிக் கடி பலர் உயிரிழப்பது சர்வ சாதா ரணமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் சப்ரா பகுதியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு முதல மைச்சர் நிதிஷ்குமார் தலைமையி லான அரசுதான் காரணம்" என்றார்.

இதையடுத்து சட்டமன்ற பாஜக உறுப்பினர்கள் இந்த முழக்கங்களை அரசுக்கு எதிராக எழுப்பினர். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த முதலமைச்சர் நிதிஷ் குமார், பாஜக உறுப்பினர்களைப் பார்த்து நீங்கள் தான் குடிகாரர்கள் என்று சத்தமிட்டார்.

இதனால், பேரவைக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேறி பேரவை வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் சப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயி ரிழந்தனர். மேலும் பலர் கவலைக் கிடமாக உள்ளனர். அவர்கள் சப்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, மது விற் பனை மற்றும் மது நுகர்வுக்கு தடை விதித்தது. அதன்பின் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்து அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரு கின்றன.

No comments:

Post a Comment