சென்னை, டிச. 27- தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக் கான முதல் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத் தில் நேற்று (26.12.2022) செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறிய தாவது:
வரும் ஜன. 9ஆம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண் டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை யாற்றுகிறார். அன்றே அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கடந்த பேரவைக் கூட் டத்தில் நான் குறிப்புரை அளித்தேன். அதன் பிறகு யாரும் கடிதம் தரவில்லை. எனவே, அந்தப் பிரச்சினை முடிந்து விட்டது.
பொதுமக்கள் பாதுகாப்புக்காக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒன்றிய அரசு சில வாரங்களுக்கு முன் முகக் கவசம் தேவையில்லை என்று கூறி விட்டு, தற்போது முகக் கவசம் அணியு மாறு கூறுகிறது. சட்டப் பேரவைக்கு உறுப்பி னர்கள் முகக் கவசம் அணிந்து வரலாம். எனினும், கரோனா பரிசோதனை தேவையில்லை.
இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படும். தற் போது கேள்வி நேரம் ஒளிப ரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மற்ற நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப முயற்சித்து வருகி றோம்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விளை யாட்டுத் துறை அமைச்சருக்கு, பேரவையின் மரபுப்படி தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு இடையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. பேரவையில் அவர்கள் ஆக்கப் பூர்வமாகத் தான் நடந்துள்ளனர். அரசியல், கட்சியின் உறுதித்தன்மை, நோக்கம், கொள் கைகளை நிலைநிறுத்துவது போன்ற வற்றுக்காக அவர்கள் சட்டப் பேர வையில் பல்வேறு முயற்சிகளை மேற் கொள்வர். அதில் தவறேதும் இல்லை.
கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் குறித்த சட்ட மசோதா திரும்பப் பெறப் பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்படாமல் இருந்தது. பின்னர், முதலமைச்சர் தலைமையிலான அமைச் சரவை, ஆயுள் முடியும் வரை கூட்டுறவு சங்கங் களின் பதவிக்காலம் இருக்கட்டும் என்று கூறி, அந்த மசோதாவை திரும் பப் பெற்றது.
ஓபிஎஸ் - பழனிசாமி விவகாரத்தில் சட்டப் பேரவையில் குறிப்புரை அளிக் கப்பட்டது. அதை யாரும் எதிர்க்க வில்லை. அவர்கள் குறிப்புரையை ஏற்றுக் கொண் டனர். ஒரு கட்சியின் கொள்கை சார்ந்த பிரச்சினையை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக அரசோ, சட் டப்பேரவையோ நடந்துகொள்வ தில்லை. சட்டப்பேரவையில் பார்வை யாளர்களுக்கு அனுமதி உண்டு.
-இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

No comments:
Post a Comment