திருச்சி, டிச. 30 பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க திருச்சி சென்றிருந்த முதலமைச்சர் பொதுமக்களிடையே பேசும் போது கூறியதாவது: கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் பயணம் செய்தது, 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டர் தூரம்! அந்தப் பயணத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்- 647. இதில் 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள்! கட்சி நிகழ்ச்சிகள்- 96.தமிழ் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காரணத்தால், அதில் பயனடைந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 நபர்கள்!
ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப்பேருக்கு நேரடியாக நலத்திட்டஉதவிகள் சென்று சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு ஆண்டில்.இதற்கு மத்தியில், எனக்கு காரோனா பாதிப்பு வந்தது, சிறிது உடல் நலிவுற்றேன் - கால் வலி வந்தது, சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அந்த சூழ்நிலையில்கூட என் னுடைய பயணம் தடைப்படவில்லை, மக்கள் பணி நிற்கவில்லை, நிற்கவில்லை என்பதல்ல நிற்கவே நிற்காது. அதுதான் உண்மை என்று கூறினார்.
No comments:
Post a Comment