இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கரோனா

புதுடில்லி, டிச.30 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது., இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு: 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண் ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரி ழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

கருநாடக மாநில சிறையில் 

மன்னிப்புப் புகழ் சாவர்க்கர் படம் திறப்பாம்

பெங்களூரு,டிச.30- கருநாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் ஹிந்துத்துவ அமைப் புகளின் நிகழ்ச்சிகளிலும் வீர சவார்க்கரின் படம் இடம் பெறுகிறது. கடந்த 19ஆம் தேதி கருநாடக சட்டப் பேரவையில் காங்கிரசின் எதிர்ப்புக்கு மத்தியில் சவார்க்கரின் படம் திறக்கப்பட்டது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படத் திறப்பு விழா   நடைபெற்றது. கருநாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், வீர சாவர்க்கரின் ஒளிப்படத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “வீர சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். இந்து மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். இந்த சிறையில் கடந்த 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி வரைஅடைக்கப்பட்டிருந்தார். சாவர்க்கர் 99 நாட்கள் இங்கு இருந்ததை நினைவுக்கூரும் வகையில் அவரது ஒளிப்படம் ஹிண்டல்கா சிறையில் திறக்கப்பட்டுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment