புதுடில்லி,நவ.22- புதிய தேர்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (20.11.2022) வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித் துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல். இவர் ஒன்றிய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் 19.11.2022 அன்று தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.
No comments:
Post a Comment