இலக்கிய அணியினருக்கு தமிழ்நாடு காங்.தலைவர் அழகிரி வேண்டுகோள்
சென்னை,நவ.22- மக்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக அர சின் செயல்களை காங்கிரஸ் இலக்கிய அணியும், அதன் சொற்பொழிவாளர்களும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித் துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடை பெற்றது.
அதில் தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றுப் பேசியதாவது:
இலக்கிய அணிகள்தான் ஓர் இயக்கத்தின் உயிர். அது வலிமையாக இருந்தால், அந்த இயக்கமும் வலிமையாக இருக் கும். கவிஞர்களுக்கு சூரியன், நிலா, மலர்கள், இயற்கை என எதைப் பார்த்தாலும் கற்பனை வரும். அவர்கள் கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டி ருப்பார்கள். அது இயல்புக்கு மாறானதாக இருக்கும்.
ஆனால், திருக்குறளின் சிறப்பு என்னவென்றால் அதில் எங்கும் புகழ்ச்சியோ, கற்பனையோ இல்லை. உலகில் எந்த மொழியிலும் எந்த இலக்கியத்திலும் இல்லாத, உண்மையை மட்டுமே சொல்லி இருக்கும். எந்த தனி மனிதனைப் பற்றியும், கடவு ளைப் பற்றியும், மொழியைப் பற்றியும் குறிப்பிடாத ஒரு இலக்கியம் இருக்கிறது என் றால் அது திருக்குறள் மட்டும் தான். மனிதனைப் பற்றியும், வாழ்க்கை நெறிகள் பற்றியும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள் ளது.
இது போன்ற நூல் உலகத் திலேயே இல்லை. இது தமி ழின் பெருமை. பகவத்கீதையில் யுத்தம் செய்வது நியாயப் படுத்தப்பட்டுள்ளது. அத னால் அதை ரஷ்ய அரசு அப் போது தடை செய்தது. உலகத் திலேயே 2ஆவது பெரிய ரயில் சேவையை ஜவஹர்லால் நேரு இந்தியாவுக்கு கொண்டு வந் தார். ரயில்வே மக்களின் சொத்து.
ஆனால், எதுவுமே தெரியாமல் பிரதமர் மோடி போன்றவர்கள் ரயிலை மட்டு மில்லை, ரயில் நிலையத்தையே விற்கிறார்கள். நமது பரப்புரை சரியில்லாததாலும் இலக்கிய அணி, சொற்பொழிவாளர்கள் செயலற்று இருப்பதாலும் தான் இந்த பாதக செயல் மக்களைவேகமாகச் சென்ற டையவில்லை. இதையெல் லாம் மக்களிடம் விரைவாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment