மலர்கிறது மனித நேயம்! மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

மலர்கிறது மனித நேயம்! மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை

தஞ்சை நவ 8- தஞ்சை மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் முதன்முறை யாக மூளைச்சாவு அடைந் தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அவருடைய உறுப்புகள் சென்னை, மதுரை மருத் துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

அரியலூர் மாவட் டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த 3-ஆம் தேதி சாலை விபத் தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளை சாவு அடைந்தது தெரிய வந்தது. 

இது குறித்து மருத்து வர்கள், அவருடைய குடும் பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதைய டுத்து அவர்கள் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவது என முடிவு செய்து மருத் துவர்களிடம் தெரிவித்த னர். 

இதையடுத்து மருத்து வர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம், இதய வால்வுகள், நுரை யீரல், கல்லீரல் ஆகிய வற்றை எடுத்து 5 பேருக்கு கொடையாக அளித்த னர். 

இதுகுறித்து மருத்து வக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன்  கூறியதா வது:- தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்த வரின் உறுப்புகள் கொடை யாக பெறப்பட்டது. 

இதில் தஞ்சை மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சாலை வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு அனுப்பி வைக் கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment