காந்திநகர், நவ.6 குஜராத் சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க பி.ஜே.பி. பேரம் பேசியது என்று டில்லி முதலமைச்சர் கெஜ்ரி வால் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜ ராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர் தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இங்கு 1995 ஆம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது.
இந்த நிலையில், புதிதாக அர விந்த் கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகிறார். எனவே இப்போதே தேர்தல் களத்தில் சூடு பறக்கத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தொலைக்காட்சி ஒன் றுக்குப் பேட்டி அளித்து இருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டில்லி முதலமைச்சர் ஆக்குவதாகக்கூறி மணிஷ் சிசோடி யாவிடம் பா.ஜ.க. பேரம் பேசியது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில், அந்தக் கட்சி யினர் இப்போது என்னை நாடி னார்கள். குஜராத் சட்டசபை தேர்த லில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக்கொண்டால், நாங்கள் சத் யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகி றோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகி றோம் என பேரம் பேசினார்கள்.
யார் இந்த பேரத்தைப் பேசியது என கேட்கிறீர்கள். எனக்குச் சொந்த மான ஒருவரின் பெயரையே.... நான் எப்படி சொல்ல முடியும்? அவர்கள் மூலமாகவே பேரம் வந்தது... பாருங் கள்... அவர்கள் நேரடியாக என்னை அணுகவில்லை. அவர்கள் ஒருவரி டம் இருந்து இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு, இன்னொருவ ருக்கு என வந்து கடைசியில் ஒரு நண்பர் வழியாக வந்தார்கள். பின் னர் செய்தி உங்களுக்கு வந்தடை கிறது.
குஜராத் சட்டசபை தேர்தலிலும், டில்லி மாநகராட்சி தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என்று பா.ஜ.க. வுக்கு பயம் வந்து விட்டது. எங்கள் கட்சியைத் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளனர்.
மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என எங்கள் கட்சித் தலைவர்கள் இருவர் மீதும் போடப் பட்ட வழக்குகள், ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ஆகும். குஜராத் மாநிலத் தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங் களுக்கும் குறைவாகத்தான் கிடைக் கும். எங்கள் கட்சி ஏற்கெனவே 2 ஆவது கட்சியாக முன்னிலை பெற் றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்குத் தள்ளி விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment