புதுப்புது நோய்கள் பரவுதல் : நோய் எதிர்ப்புத் திறன் முக்கியம் சுகாதார மாநாட்டில் முதலமைச்சர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

புதுப்புது நோய்கள் பரவுதல் : நோய் எதிர்ப்புத் திறன் முக்கியம் சுகாதார மாநாட்டில் முதலமைச்சர் உரை

சென்னை, நவ 16 நோய்கள் புதுப்புது வடிவம் எடுப்பதால், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் திட்டமிடுதல் குறித்து அரசு ஆராயும் என்று சுகாதார மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

தமிழ்நாடுஅரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சென்னையில் நேற்று (15.11.2022) சுகாதார மாநாடு-2022 நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- கல்வியும்-மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகத்தான துறையாக இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. உங்களது பணிகளை மேலும் செம்மைப்படுத்தி, மக்களுக்கு உதவத் திட்டமிடும் நோக்கத்தோடு இந்த மாநாட்டை நீங்கள் இங்கே கூட்டியிருக்கிறீர்கள். 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளோடு இணைந்த மருத்துவ மனைகள் ஆகியவற்றின் செயல்பாடு களைச் சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரசி னுடைய நோக்கத்தை முழுமைப் படுத்துவதற்கு இந்த மாநாடு உதவி கரமாக இருக்கும் என்று நான் உறுதி யாக நம்புகிறேன். ஊரகப்பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை, எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர் களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாகவும், உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள்.ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என்பதற்காகத்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்தோர் எண் ணிக்கை விரைவில் ஒரு கோடி நபர்கள் என்ற எண்ணிக்கையை அடைய இருக்கிறது.  சாலை விபத்தினால் ஏற் படக்கூடிய இறப்பைக் குறைப்பதற்கும், பொன்னான நேரம் என்று சொல் லப்படும் முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை களில் அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ரூ.1 லட்சம் வரை இலவசமாக வழங்கப்படும் 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டம் 18-12-2021 முதல் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞரின் வருமுன் 

காப்போம் திட்டம்

நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யக்கூடிய வகையிலே 'கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்' மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோ தனை செய்திருக்கிறார்கள்.  நான் பெருமையோடு சொல்கிறேன், இந்த 3 திட்டங்களும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்து, அங்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதா? மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளைக் களைய உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு-சுகாதாரம் ஆகிய வற்றில் தமிழ்நாடு மிக உயர்ந்த குறியீடு களை அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல் வேண்டும். நோய் எதிர்ப் புத்திறனை உருவாக்க... சுகாதாரக் குறியீடுகளை வைத்து மருத்துவ மனைகளை தரவரிசைப் படுத்து கிறார்கள். இந்த தரவரிசையில் பின்ன டைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டுவர வேண்டும். மருத்துவமனைகளின் உட்கட்ட மைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை, மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும். சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும். நோய்கள் புதுப்புது வடிவம்  எடுத்து வருகின்றன. அவற்றை வெல் லும் முறைகளும் பன்முனை கொண்ட தாக மாற வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்புச்சக்திக்குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர் களும் சொல்லத் தொடங்கி இருக் கிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலைச் செய்யலாம் என் பதையும் நாம் ஆராய வேண்டும்.  நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதனைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவை குறித்தும் நாம் ஆராய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அந்த வகையில் இந்த மாநாடு, தமிழ்நாடுமக்கள் நல்வாழ்வுத்துறையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப் புமுனையாக அமையும்; அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். 


No comments:

Post a Comment