கனமழை குறையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

கனமழை குறையும்!

சென்னை, நவ. 20- வடக்கில் இருந்து தமிழ்நாடு நோக்கி வீசும் குளிர்காற்று, காற் றழுத்தத் தாழ்வு மண்ட லத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழ்நாட்டில் மிக கன மழை வாய்ப்பு குறையும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண் ணன் செய்தியாளரிடம் நேற்று (19.11.2022) கூறிய தாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் கடந்த 18-ஆம் தேதி நில விய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறி யது. இது மேற்கு அல்லது வடமேற்காக நகர்ந்து நவ. 20-ஆம் தேதி (இன்று) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும்.

பின்னர், மேற்கு அல்லது வடமேற்காக நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கிச் செல்லும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகு தியால், கடலில் இருந்து தமிழ்நாடு நோக்கி வீசும் காற்றின் வலு குறைந்துள் ளது. அதனால், வடக்கில் இருந்து தமிழ்நாடு நோக்கி குளிர் காற்று வீசுகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண் டலமாக மாறும். ஆனால், கரையை நெருங்கும் போது நிலப் பரப்பில் நிலவும் குளிர் காற்று, காற்றழுத்தத் தாழ்வு மண் டலத்தை வலுவிழக்கச் செய்யும். கரையை நெருங் கும்போது மேலும் வலு குறைந்து, காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறக் கூடும். இதனால் தமிழ் நாட்டுக்கு மிக கனமழை மற்றும் பரவலான மழைக் கான வாய்ப்புகள் குறை யக்கூடும்.

எனினும், காற்றழுத் தத் தாழ்வு நிலை காரண மாக 4 நாட்களுக்கு தமிழ் நாடு, புதுச்சேரி மாநிலங்க ளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். நவ. 21, 22ஆ-ம் தேதிகளில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங் கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment