சென்னை,நவ.6- வேளாண் துறைக்கான விவசாயம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறு - குறு தொழில்களுக்கான கடன் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் சாந்திலால் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியன் வங்கியின் நடப்பாண்டு 2ஆம் காலாண்டு மற்றும் அரையாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது:
இந்தியன் வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்துள்ளது. அதன் மூலம் ரூ.10.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு எனும் அடிப்படையில் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து, ரூ.1,225 கோடியாக இருக்கிறது.
விவசாயம், சில்லரை கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பிரிவில் வழங்கப்பட்ட கடன்கள் 13 சதவீதம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 256 கோடியாக உள்ளது.
இது தவிர வீட்டு வசதி கடன் 11 சதவீதமும், வாகன கடன் 28 சதவீதமும், தனிப்பட்ட கடன் வகைகள் 26 சதவீதமும், தங்க நகைக்கடன் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
வைப்பு நிதிகளை பொறுத்தவரையில் 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.5 லட்சத்து 88 ஆயிரத்து 860 கோடியாக இருக்கிறது. நடப்பு கணக்குகள் 9 சதவீதமும், சேமிப்பு கணக்குகள் 7 சதவீதமும் இந்த காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment