ராமநாதபுரம், நவ.6 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல் அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 187 தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (5.11.2022) அதிகாலை இலங்கை மன்னார் பகுதியின் 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் என 10 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இவர்களை நேற்று காலை தனுஷ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணை செய்து, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
2 மாத குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை, கணவர் ஆகியோருடன் வந்த அனுசியா என்பவர் கூறும்போது, பொருளாதார நெருக்கடியால் உணவு உள்ளிட்ட பொருட் களை வாங்க முடியாமல் சிரமப்பட்டோம். அதனால் தமிழ்நாட்டிற்கு வந்தோம். எங்கள் 4 பேரையும் படகில் அழைத்து வர ரூ.1.50 லட்சம் கொடுத்தோம் என்று கூறினார்.

No comments:
Post a Comment