தமிழ்நாட்டில் புதிதாக 119 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 119 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, நவ.6 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று (5.11.2022) 119- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ் நாட்டில்  இன்று 119 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு 10-க்கும் மேல் பதிவாகியுள்ளது. மருத்துவ மனையில் 224 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 1,139 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment