88 ஆண்டு 'விடுதலை'யில் 60 ஆண்டுகள் ஆசிரியர் தொண்டிற்கு நன்றி காட்டிடும் வகையில் தமிழர் தலைவர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக (சுயமரியாதை நாள் -டிசம்பர் - 2) நாகப்பட்டினம், திருவாரூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இனவுணர்வாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களின் கூட்டு முயற்சியால் திரட்டப்பட்ட 'விடுதலை' சந்தாக்களுக்கான தொகை ரூ.4,38,050 தொகையை 20-11-2022 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment