ஆலந்தூர், நவ 11 ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின் சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னம், பயணிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் பணி இடங்களுக்கு செல்வதற்கான பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த இணைப்பு சேவை வசதிகளில் தற்போது சிற்றுந்து (மினி பஸ்) சேவை மெட்ரோ ரயில் பயணி களுக்காக பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வரு கிறது. மேலும் கூடுதலாக எம்.ஆட்டோ பிரைடு என்ற மின்னியங்கி 3 சக்கர வாகன இணைப்பு சேவையை அறிஞர் அண்ணா ஆலந் தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் மேனாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத் தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, எம்.ஆட்டோ குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மன்சூர் அல் புஹாரி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என். சந்திரன் உள்பட பலர் கலந்துகொண் டனர்.
ஒரு கி.மீ. செல்ல ரூ.12
எம்.ஆட்டோ பிரைட் முழுமையாக மின்சார சக்தியில் இயங்கும் முதல் 3 சக்கர வாகனமா கும். இதனை செயலி மூலம் பயன் படுத்தி, மின் னணு முறையில் பணத்தை செலுத்த லாம். நேரடியாகவும் பயணிகள் பயன் படுத்திக் கொள்ளலாம். தொடக்க சலுகையாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்ற கட் டணத்தில், இந்த சேவை முதல் கட்ட மாக அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பு சேவை வசதியை மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக் கொண் டுள்ளது.
No comments:
Post a Comment