டிசம்பரில் மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

டிசம்பரில் மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


திருச்சி, நவ.11- "தமிழ்நாட்டின் தனிக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கடந்தாண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் மாணவர்களை துபாய்க்கு அழைத்து செல்வதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட 67 அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்   திருச்சி விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு செல்லும் மாணவர்கள் சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா மற்றும் கல்வித் தொடர்பான முக்கிய இடங்களை நேரில் கண்டு களிக்க உள்ளனர். பின்னர் வரும், 14ஆம் தேதி அதிகாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்தடை கின்றனர்.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாடு, தேசியக் கல்வி கொள்கையை பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டு மல்ல, தற்போது தமிழ்நாடு வந்து சென்ற ஒன்றிய கல்வி அமைச்சரும் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர்  எதிர்த்து வருகிறார். அதற்காக தான் தமிழ்நாட்டுக்கென மாநிலக் கல்வி கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மேலும் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப் படுகிறது. அது வந்த பின்பு நாங்கள் எந்த கொள்கையை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.

பொருளாதாரத்தில் பின் தங்கி யோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப் புகள் ஏற்படும். எனவே இதை தடுப் பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோ ருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்" என்றார்.


No comments:

Post a Comment