Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
November 16, 2022 • Viduthalai

 மனிதநேயக் கொடியின் பட்டொளி பாரீர்!

மனிதப் பண்புகளில் தலையாய பண்பு அவர்தம் கொடை உள்ளத்தினால் செய்யும் கொடைகள்.

கொடை என்னும்போது அதற்கு ஒரு குறுகிய பொருள் கொள்ளத் தேவையில்லை. பரந்துபட்ட - விரிவடைந்த "கொடைகளாக" அவற்றை நாம் பகுத்துப் பார்த்து அறிவுக்கு வேலை கொடுக்கலாம்! 

'கொடை' என்பது ஏதோ தம்மிடம் உள்ள செல் வத்தை  - மற்றொரு தேவையாளருக்கு அளித்தல் என்பதான பொருளோடு அடக்கி விடக் கூடாது!

பொருளாதாரத்தாலானவை கொடைகளே அல்லவெனவும் நாம் பொருள் கொள்ளத் தேவையில்லை.

ஆசிரியரின் அறிவுக் கொடை, மருத்துவர்கள் பலரது மருத்துவ சிகிச்சைக் கொடை  - கட்டணம் வாங்கினாலும், வாங்கவிட்டாலும் - காரணம் அவர்களது வாழ்வாதாரத்திற்குரிய தக்க பொருளை அவர்கள் தேடுவது குற்றமல்லவே! (சிலரது பகற்கொள்ளைகளை நியாயப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்ற போதிலும்கூட)

ஏழை, எளிய மனிதர்களால்கூட கொடை யுள்ளம் இருந்தால் கொடை கொடுத்தல் சாத் தியமே! உடல் உறுப்புகளை -  தமக்கு உற்றவர்களுக்கு, உறவுகளுக்குத் தேவைப்படும்போது தருவதும் கொடை உள்ளம் அல்லவா!

பலருக்கு சிறுநீரகம் ஒன்றை (நமக்கு இரண்டு உள்ள நிலையில்) கொடையாகக் கொடுக்க முன் வருவோர் சிறந்த வள்ளல்கள் தானே! விழிக்கொடை ('கண்தானம்'), குருதிக் கொடை  ('ரத்த தானம்') - இவை எல்லாம் சிறந்த கொடைகளல்லவா?

அதையெல்லாம் தாண்டி, முழு உடற்கொடை என்பதை, மறைந்த பிறகு - மருத்துவக் கல்லூரிக்கு அளித்துவிட தங்கள் விருப்பத்தை 'மரண சாசனமாக' நமது இயக்கத் தோழர்கள்  பாலின வேற்றுமை இன்றி - எழுதி வைத்தும், அவரது குடும்பத்தினரும் அவர் விருப்பத்தை செயல்படுத்துவதும் மிகப்பெரும் தொண்டறம் அல்லவா?

இறந்த பின் உடற்கொடை தருவது என்பதால், எத்தனை எத்தனை புதிய மருத்துவர்கள் - வருங்கால நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றுவதற்கு இந்த உடற்கொடை மறைமுக நன்மை, 'செயலூக்கி' அல்லவா?

இப்போது மற்றொரு வகையிலும் 'மனிதம்' தனது கொடைப் பண்பை வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முன் வந்திருப்பது, பழங்காலத்தில் கேள்விப்படாத இந்த பகுத்தறிவு யுகத்தின் பாராட்டத்தக்க வளர்ச்சியாகும்!

விபத்துக்களால் மூளைச்சாவு பெற்று, மரணமடையும் பல இளைஞர்கள்   - வாலிபர்கள் - ஆகியவரின் உடல் உறுப்புகளை  - காவல்துறையின் - மற்ற மற்ற அரசு அதிகாரிகள் - மருத்துவமனை மருத்துவர்கள் முதலியோரின் ஒருங்கிணைந்த தொண்டறத் தின் பயனாக, மூளைச் சாவுக்கானவர்களது உடல் உறுப்புகளை அவர்கள் பெற்றோர்களும், நல்ல மனிதநேயப் பண்புடன், அவ்வுறுப்புகள் தேவை எனப் பதிவு செய்து பல மருத்துவமனைகளில் காத்திருப்போருக்கு உதவிடும் வகையில் கொடையாக கொடுக்கும் மானுட நேயப் பெரு உள்ளங்களை எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை!

அதன் மூலம் இறந்து போன தங்கள் பிள்ளைகள் - உறவுகள் மற்றவர்கள் மூலம் இறக்காத வாழ்வை இரந்து கொடுப்போர்மூலம் பெற்று வாழ்ந்து மகிழ்கின்ற அரிய வாய்ப்பினை அல்லவா பெறுகின்றனர்.

பரிசோதனைக்கு,  முன்பு எலிகள், முயல்கள் போன்றவை பெரிதும் பயன்படுத்தப் பட்டன. இப்போது உடற்கூறுப் பாடத்தைப் படிக்க - போதிக்க மனித உடல் உறுப்புகளும் உதவுகின்றன என்று என்னும்போது - அதையும் தாண்டி மற்றவரை வாழ வைக்க, இந்த உடற்கொடை, உறுப்புக் கொடைகள்  முக்கிய காரணிகளாக அமைந்து வருகின்றன.

கருணையுள்ளம் தரும் புதுவாழ்வு - மற்றவருக்கு இந்த உலகில்!

 சென்னையில் மூளைச் சாவு பெற்ற ஒரு பெண்ணின்  உடல் உறுப்புகளை சென்னையில் உள்ள முக்கிய பிரபல மருத்துவக்  கல்லூரிகள் பலவற்றிற்கும் பிரித்து அளித்துள்ளனர் அரசு மருத்துவத் துறையினர் என்ற செய்திதான் (13.11.2022) எப்படி நம்முடைய காதுகளில் மனிதநேய இசையாக ஒலித்து மகிழ வைக்கிறது பார்த்தீர்களா?

எனவே வாழும்போது நாம் பிறருக்குப் பயன்பட்டோமோ இல்லையோ - மறைந்த பிறகும் பயன்பட இது ஓர் அருமையான, கொடை அல்லவா?

செத்தும் வாழத் தயாராகவே உள்ள "பெரியார் உடற்கொடை, உறுப்புக் கொடை"யில் உறுப்பினர் களாகவும் பதிவு செய்து கொள்ளுங்கள் - மற்றும் எங்கும் இதில் தயக்கம் இன்றி முன்வந்தால் மனிதநேயக் கொடி பட்டொளி வீசிப் பறப்பது உறுதி!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn