சென்னை,நவ.6 பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வு நடைமுறைகள் 10-ஆம் தேதியுடன் முடிக்கப்பட்டு, 13-ஆம் தேதி இறுதி ஆணை வழங்கப்பட உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள் ளது. அதன்படி, வருகிற 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இந்த துணை கலந்தாய்வுக்கு பதிவு செய்ய லாம். https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் வாயிலாகவும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறி யியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 பொறி யியல் சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம். சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12-ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்த, தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணை கலந்தாய்வில் பங்கு பெறலாம்.
Sunday, November 6, 2022
Home
தமிழ்நாடு
பொறியியல் கல்வி: துணை கலந்தாய்வுக்கு 9-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை அறிவிப்பு
பொறியியல் கல்வி: துணை கலந்தாய்வுக்கு 9-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment