சென்னை,நவ.6- தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் 505 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு இரு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான முதல் பருவதேர்வு வருகிற 25-ஆம் தேதி தொடங்கி பல்வேறு பாட வாரியாக டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது. விரிவான தேர்வுகால அட்டவணை வருகிற 11-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணி டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி தொடங்கி நடைபெறும். தேர்வுகள் முடிந்தபின் மாணவர்களுக்கு டிசம்பர் 18-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதன்பின் கல்லூரிகள் மீண்டும் 2-ஆம் தேதி திறக்கப்படும். இந்த தகவலை தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Sunday, November 6, 2022
25-ஆம் தேதி பாலிடெக்னிக் கல்லூரி பருவத் தேர்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment