ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆறு போக்குவரத்து பெண் வார்டன்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆறு போக்குவரத்து பெண் வார்டன்கள்

ஆவடி, அக். 24- ஆவடி காவல்துறை ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவல கத்தை மூன்றாக பிரித்தபோது ஆவடி காவல்துறை ஆணையரகத் துக்கு 15 போக்குவரத்து போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டனர். 

ஆவடி காவல்துறை ஆணையர கம், 626 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. இதில் முக்கியமான சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து பராமரிப்பு ஒரு சவாலாகவே இருந்து வந்தது. கூடுதலாக 6 பெண் வார்டன்கள் போக்குவரத்து காவல்துறையினரின் பலத்தை அதிகரிக்கவும், போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் 29 புதிய போக் குவரத்து வார்டன்கள் ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் போக்குவரத்து பாதுகாப்பு நட வடிக்கை மேற்கொள்ள இணைத் துக் கொள்ளப்பட்டு சேவை புரிந்து வருகின்றனர். 

தற்போது புதிதாக 6 பெண் போக்குவரத்து வார்டன்கள் உள் பட மொத்தம் 44 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். 2000-ஆவது ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாடு போக்கு வரத்து காவல்துறை அமைப்பில் பெண் வார்டன்கள் ஆவடி காவல் துறை ஆணையரகத்தில் இணைக் கப்படுகின்றனர். அவர்கள் அனை வரும் தற்போது பல்வேறு பள்ளிக ளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர் கள் என்பது குறிப் பிடத்தக்கது. 

இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், சாலை பயனாளர்களிடையே சாலை ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து வார்டன்கள் வார இறுதி நாட்களில் பல்வேறு சந்திப் புகளில் வழக்கமான சாலைப் பணியை செய்கிறார்கள். வழக்க மான பணிகளுக்கு மட்டுமின்றி போக்குவரத்து காவலர்கள் விழாக் கள், புத்தாண்டு பணிகள் மற்றும் தேர்தல் பணி போன்றவற்றின் போதும் உதவி வருகின்றனர். ஆவடி மாநகர காவல்துறை ஆணை யர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை இணை ஆணையர் வளாகத்தில் இவர்களுக்கான புதிய அலுவலக அறையை திறந்து வைத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப் போது கூடுதல் காவல்துறை ஆணை யர் விஜயகுமாரி, போக்குவரத்து பிரிவு காவல்துறை இணை ஆணையர் அசோக்குமார், போக் குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஜெயகரன் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment