18.10.2022 செவ்வாய்க்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: காலை 10.00 மணி இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில். தலைமை:
மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர் சிறப்புரை: மு.சேகர் மாநில தொழிலாளரணி செயலாளர், வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர் பொருள்: 1. திராவிடர்கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துததல், 2. விடுதலை சந்தா சேர்த்தல், 3. இயக்க வளர்ச்சிப்பணிகள் குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர்கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், மாணவர் கழகம், தொழிலாளரணி, கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கருஞ்சட்டையுடன் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர், கோ.வெற்றிவேந்தன், மாவட்டச் செயலாளர்.
காஞ்சிபுரம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 6 மணி இடம்: காஞ்சிபுரம் பஞ்சு பேட்டை தெரு.டிஏஜி அரிசி ஆலை. பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றல். தலைமை: மாவட்ட தலைவர் டிஏஜி அசோகன் முன்னிலை: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர்கள், ஊமை.செயராமன் மற்றும் வி.பன்னீர்செல்வம் கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய , மாநகர, தோழர்கள் மற்றும் இளைஞர் அணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கருப்புடை அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட தலைவர் டிஏஜி.அசோகன் சார்பாக அ.வெ.முரளி. காஞ்சி மாவட்ட கழக இணை செயலாளர்.
No comments:
Post a Comment