மாநில மொழிகளை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி மேனாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

மாநில மொழிகளை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி மேனாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு, அக்.17 மாநில மொழிகளை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்று மேனாள் முதலமைச்சர் குமாரசாமி  கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று முன்தினம் (15.10.2022) மேனாள் முதலமைச்சர் குமாரசாமி அளித்த பேட் டியின் போது கூறியதாவது: 

மொழி விவகாரத்தில் நமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், கன்னட அமைப்புகள், பிற சங்கங்களுடன் சேர்ந்து ஜனதாதளம் (எஸ்) கட்சியும் வீதியில் இறங்கி போராடும். காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளும், நமது மாநிலத்திற்கு எதிராகத் தான் உள்ளனர். ஒன்றிய அரசு ஹிந்தி திணப்பை மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் ஹிந்தி மொழி திணப்புக்கு எதிராக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டத் தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். ஹிந்தி மொழி திணிப்பு மூலமாக ஒன்றிய அரசு, மாநில மொழிகளை அழிக்க முயற்சிக்கிறது. நாட்டில் இருக்கும் பிரச்சினை களை முதலில் சரி செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத் திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்த கூட்டத்தில் மாநிலத்தில் வீடுகள் தோறும் கன்னட கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.  


No comments:

Post a Comment