நாகப்பட்டினம் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

நாகப்பட்டினம் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

நாகப்பட்டினம், அக். 22- நாகப் பட்டினம் மாவட்ட திரா விடர் கழக பொறுப்பா ளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 20-.10.-2022  வியா ழன் முற்பகல் 11 மணி யளவில் நாகை ஓய்வூதியர் சங்க கட்டடத்தில் நடை பெற்றது.

தலைமை வகித்த  கழ கப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், முன்னிலை வகித்த மாநில அமைப்பு செயலா ளர் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகு வாக இலக்கை அடைவது எப்படி, கிராமப் பிரச்சா ரம், அமைப்புப் பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக கூட்டங்களை பொது வெளியில்  நடத்தி மக் களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது எனவும் 

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண் யம், கீழ்வேலூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதி களில் ஆதரவாளர்கள் தோழமை இயக்கத்தினர் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந் தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின்  90ஆவது பிறந்த நாள் (டிசம்பர் - 2)பரிசாக வழங்குவது, ஆசிரியர் பிறந்தநாள் பெருவிழா வினை மாவட்டம் முழுவ தும் சுவர் எழுத்து விளம் பரங்களை எழுதுவது என முடிவு செய்யப்பட் டது.

மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி. நெப்போலி யன், மாவட்ட செயலா ளர் ஜெ.புபேஸ்குப்தா மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு  பொதுக்குழு உறுப்பினர் கமலம், மண்டல இளை ஞரணி செயலாளர் நாத் திக. பொன்முடி, கீழ் வேலூர் ஒன்றிய தலைகர் துரைசாமி, திருமருகல் ஒன்றிய செயலாளர் இர மேஷ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளார் கவிதா, நாகை நகர செய லாளர் நைனாமுகமது, கொட்டாரக்குடி மாத வன், அஜித் , நாகை இரவி தஞ்சை நகர செயலாளர் அ.டேவிட் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

10 விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தனர்

புதிய பொறுப்பாளர்கள்

நாகை நகரத் தலைவர்: தெ.செந்தில்குமார்

நாகை நகரச் செயலா ளர்: அ.நைனாமுகமது

No comments:

Post a Comment