நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

நன்கொடை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியா தைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர்களின் அய்ந்தாம் ஆண்டு (5.10.2022) நினைவைப் போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் இரா.இசையமுது மற்றும் பெயர்த்தி டாக்டர் தேனருவி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.

- - - - -

தந்தை பெரியார் அறிஞர் அண்ணா டாக்டர் கலைஞரின் கொள்கைகளை உள்வாங்கிய கழகத் தோழர் மணியின் வாழ்விணையர் ம.அஞ்சலா இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (07.10.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500அய் அவர்களது மகன் (செங்கல் பட்டு மாவட்டம்) படாளம் ம. கருணாநிதி வழங்கினார்.

- - - - -

காவல்துறையில் உதவி ஆணை யராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியாரின் பற்றாளருமான நினைவில் வாழும் தஞ்சை சந்திரசேகர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று (5.10.2022) அவரின் நினைவைப் போற்றும் வகையில் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000 (காசோலை) நன்கொடையை அவரது இணையர் கமலா,
மகன்கள் கமலசேகர் (அமெரிக்கா), இராசசேகர் (ஜப்பான்) ஆகியோர் வழங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment