புதுடில்லி, அக். 12- தொடர்ந்து 4ஆ-வது ஆண்டாக, இந் தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர் லாந்து ஒப்படைத்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்க ளாக கருதப்பட்டு வந்தன.
அதனால், அந்த வங்கி களில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு வைத்திருந்தனர். அவர்கள் வரிஏய்ப்பு செய்வதால், அந்தந்த நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
எனவே, இதற்கு முடிவு கட்ட அந்த வங் கிக்கணக்கு விவரங்களை பெறுவதற்காக, தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசு டன் செய்து கொண்டன. இதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளி நாட்டினரின் கணக்கு விவரங்களை அந்தந்த நாட்டிடம் சுவிட்சர் லாந்து பகிர்ந்து கொள்ள தொடங்கியது.
ஆனால், இந்தியாவி டம் 2019ஆ-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் இந்தியர் களின் வங்கிக்கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கி யது. ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.
இந்தநிலையில், தொடர்ந்து 4ஆ-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவ ரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப் படைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த விவரங்கள் வந்து சேர்ந் ததாக ஒன்றிய அரசு வட் டாரங்கள் தெரிவித்தன.
தொழிலதிபர்கள் இந்த 4-ஆவது தொகுப் பில், நூற்றுக்கும் மேற் பட்ட தனிநபர்கள், நிறு வனங்கள் ஆகியோரின் வங்கிக்கணக்கு விவரங் கள் இடம்பெற்றுள்ளன. சிலர் ஒன்றுக்கு மேல் வைத்திருந்த கணக்குக ளின் விவரங்களும் அளிக் கப்பட்டுள்ளன. பெரும் பாலும், தொழிலதிபர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தி யர்கள் மற்றும் அரசியல் வாதிகள், முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோ ரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
அவற்றில், இந்தியர் களின் பெயர், முகவரி, வங்கியின் பெயர், கணக்கு எண், கணக்கில் நிலுவை யில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இக்கணக்கு களில் மொத்தம் எவ்வ ளவு தொகை உள்ளது, எத்தனை பேரின் கணக்கு கள் கிடைத்துள்ளன போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். ரக சியம் கடைபிடிக்க வேண் டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பதே அதற்கு காரணம்.
சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை அந்தந்த நபர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் வருமான வரி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். வருமானத்தை மறைத் திருந்தது கண்டுபிடிக்கப் பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் கள். வரிஏய்ப்பு, சட்ட விரோத பண பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்ற குற் றங்களை கண்டுபிடிக்க இந்த தகவல்கள் பயன் படுத்தப்படும் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.
இதுபோல், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கு அடுத்தகட்ட தகவல் களை சுவிட்சர்லாந்து அளிக்கும். இந்தியா மட்டுமின்றி மொத்தம் 101 நாடுகளுடன் சுவிஸ் வங்கிக்கணக்கு தகவல் களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து வருகிறது. இது வரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங் களை அளித்துள்ளது.
No comments:
Post a Comment