புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல்

புதுக்கோட்டை, அக். 27- புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 22-.10.-2022 அன்று காலை 11 மணியளவில் புதுக்கோட்டை கழக அலுவலகத்தில்  நடை பெற்றது. தலைமை வகித்த  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப் பில் இலகுவாக இலக்கை அடை வது எப்படி, கிராமபிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்கள்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா , தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய 'ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை' நூல் அறிமுக கூட்டங்களை பொது வெளியில்  நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும், புதுக்கோட்டை கழக மாவட்டத்தில் உள்ள புதுக் கோட்டை, கந்தர்வக்கோட்டை, திருமயம் உள்ளிட்ட (3) சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள் தோழமை இயக்கத்தினர் சட்ட மன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந் தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ்வது எனவும்  டிசம்பர்-2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் குடும்பத் துடன்  பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

மாவட்டத் தலைவர் முனைவர் அறிவொளி, மாவட்ட செயலாளர் ஆசிரியர் வீரப்பன், மாநில ப.க துணைத்தலைவர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் சுப்பை யன், மாவட்டத் துணைத்தலைவர் இராஜேந்திரன், நகர ப.க. சேகர்உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல் படுத்தட உழைப்போம் - _ என உற் சாகமாக உரையாற்றினர்.

காப்பாளர் புஸ்பநாதன், திரு மயம் ஒன்றியத் தலைவர் ஜேக்கப் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

No comments:

Post a Comment