புனே, அக். 23- பன்னாட்டளவில் கரோனா பொது சுகாதார அவசரநிலை தொடர்ந்து உள்ளது. மேலும் வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகின்றன. புனே மரபணு மாறிய ஒமிக்ரான் வைரசால் மேலும் ஒரு கரோனா அலை வீசக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமிக் ரானின் அதிவேக பரவல் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒமிக்ரானின் 300 க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. இப்போது தொடர்புடையது எக்ஸ்பிபி என்று நினைக்கிறேன், இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். சில மறுசீரமைப்பு வைரஸ்களை நாம் முன்பே பார்த்து உள்ளோம்.
இது மிகவும் நோயெதிர்ப்பை தவிர்க்கிறது, அதாவது இது ஆன்டிபாடிகளை கடக்க முடியும். எக்ஸ்பிபி காரணமாக சில நாடுகளில் தொற்றுநோய்களின் மற்றொரு அலையை நாம் காணலாம். இதன் வீரியம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. வைரஸ் உருவாகும்போது, அது மேலும் பரவக்கூடியதாக மாறும்.
பன்னட்டளவில் கரோனா பொது சுகாதார அவசர நிலை தொடர்ந்து உள்ளது.மேலும் வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகின்றன.
"எனவே தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை, அதாவது அனைத்து முன்னெச்சரிக் கைகள் மற்றும் கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படு கின்றன. நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் இப்போது பல கருவிகள் உள்ளன, மிக முக்கியமான விஷயம் தடுப்பூசிகள் என கூறினார்.