10 கோடி கரோனா தடுப்பூசிகள் அழிப்பாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

10 கோடி கரோனா தடுப்பூசிகள் அழிப்பாம்!

புனே, அக். 23- தடுப்பூசி தயாரிப்பாளர்கள் அமைப்பின் ஆண்டுக்கூட்டம், புனேவில் நடை பெற்றது. இதில், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத் தலைவர் அடார் பூனவல்லா பங்கேற்றார். பின், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், எங்கள் நிறுவனம் 'கோவிஷீல்டு' தயாரிப்பை நிறுத்தி விட்டது. கையிருப்பில் உள்ள 10 கோடி 'டோஸ்' தடுப்பூசி காலாவதி ஆனதால், அவை வீணாகி விட்டன.

தற்போது, இந்தியாவில் கரோனா பரவல் குறைந்து விட்டதால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பூஸ்டர் தடுப்பூசி களுக்கு தேவை ஏற்படவில்லை.எனவே, ஒமைக்ரான் தொற்றை தடுக்கும் வகையில், அமெரிக்காவின் நோவோ வேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். கோவோவேக்ஸ் என்ற இந்த தடுப்பூசி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, அடுத்த இரு வாரங்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment