டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளிடையே பாகுபாடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளிடையே பாகுபாடா?

ஒன்றிய அரசுக்கு அகில இந்திய மருத்துவர்  சங்கம்  எதிர்ப்பு!

புதுடில்லி, அக். 23- அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு மற் றும் மருத்துவர்கள் சங் கங்கள் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

டில்லி எய்ம்ஸ் மருத் துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற் பாடுகளை ஒருங்கி ணைத்து எளிதாக்க ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று புதிதாக நிலை யான வழிகாட்டுதல் நடை முறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதனை ஏற்று, டில்லி எய்ம்ஸ் இயக்குநர் எம்.சிறீனிவாஸ், மக்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் ஒய். எம்.காந்த்பாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப் பாட்டு அறையில், மருத்துவ மனை நிர்வாகத் துறை யைச் சேர்ந்த மருத்துவர் கள் அதிகாரிகளாக இருப் பார்கள். அவர்கள், சிகிச் சைக்கு வரும் நாடாளு மன்ற உறுப்பினர்களுக் குத் தேவையான ஏற்பா டுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க நியமிக்கப்பட் டுள்ளார்கள். புதிய வழி காட்டுதல் நடைமுறை கள் படி, வெளி நோயா ளிகள் பிரிவு, உள் நோயா ளிகள் பிரிவு மற்றும் அவ சர ஆலோசனை சிகிச் சைக்கு வரும் மக்களவை மற்றும் மாநிலங்களவை யின் தற்போதைய உறுப் பினர்களுக்குத் தேவை யான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க நியமிக் கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலை யில், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, மருத் துவர்கள் சங்க கூட்ட மைப்பு மற்றும் பிற மருத்துவர்கள் சங்கங்கள் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அகில இந்திய மருத் துவ சங்க கூட்டமைப்பி னர் கூறுகையில், “ஒரு பக்கம், நாட்டில் வி.அய்.பி. கலாச்சாரம் இல்லை என்று பிர தமர் மோடி கூறுகிறார். மறு பக்கம், எய்ம்ஸ் இயக்குநர் வி.அய்.பி. கலாச்சாரத் திற்கு வழிவகுத்து கடிதம் எழுதியுள்ளார். நாங்கள் எப்போதும் மருத்துவ மனைகளில் வி.அய்.பி. கலாச்சாரத்திற்கு எதி ராக இருக்கிறோம். இந்த நாட்டில் உள்ள ஒவ் வொரு நோயாளியும் நல்ல சிகிச்சைக்கு தகுதியான வர், அதில் ஒரு எம்.பி மற்றும் சாமானிய நபரும் அடங்குவர்” என்று கூறி யுள்ளனர். 

மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் கூறு கையில், “வி.அய்.பி.  கலாச் சாரத்தை வன்மை யாக கண்டிக்கிறோம். எந்த நோயாளியும் மற்றொ ருவரின் சலுகைகளை விலையாகக் கொண்டு துன் பப்படக்கூடாது” என்று கூறி யுள்ளனர்.

No comments:

Post a Comment