தூத்துக்குடி ஸ்டெர்லைட் - துப்பாக்கிச் சூடு உதவி ஆணையர் உள்பட 4 காவல்துறையினர் பணியிடை நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் - துப்பாக்கிச் சூடு உதவி ஆணையர் உள்பட 4 காவல்துறையினர் பணியிடை நீக்கம்

சென்னை, அக். 23- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி நடைபெற்ற அறவழிப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள்மீது நடத் தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர் பாக காவல்துறையினர் நால்வர் பணியிலிருந்து இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிக் கடந்த 22.5.2018 அன்று போராட்டம் நடைபெற்றது. அப் போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள்மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை செய் வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டது. 3000 பக் கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அளித்தார். இந்த அறிக்கை இம் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட் டது.

அதில் துப்பாக்கிச் சூடு நடை பெறுவதற்கு முன்னரே நிமிடத் திற்கு நிமிடம் அப்போதைய முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் அதில் சில காவல்துறையினர் மீது ஆணை யம் குற்றம்சாட்டியிருந்தது. அதன் படி, காவல்துறை டி.அய்.ஜி. கபில் குமார், மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் லிங்கத் திரு மாறன், காவல்துறை ஆய்வாளர் கள் திருமலை, ஹரிஹரன், பார்த் திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரெனென்ஸ் உள் ளிட்ட காவல்துறையினர் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய் திருந்தது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  சம்பவத் தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை (தற்போதைய நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர்), காவலர்கள் சுடலைகண்ணு, சங் கர், சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம் அளிக்க தாக்கீது

அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர், 3 வருவாய் துறை அலுவலர்கள் என மொத்தம் 21 பேர் மீதும் துறை சார்ந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பட்டுள்ளது.தூத்துக் குடியில் துப்பாக்கிச் சூடுநடத்த, அப்போது நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட்டிருந்த வட்டாட் சியர் சந்திரன், துணை வட்டாட் சியர்கள் சேகர், கண்ணன் ஆகி யோர்தான் காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர் உத்தர விட்டதை அடுத்து, ‘உங்களைஏன் பணி இடைநீக்கம் செய்யகூடாது?' என்று 17-பி பிரிவின் கீழ்விளக்கம் கேட்டு 3 பேருக்கும், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தாக்கீது அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment