திருவனந்தபுரம், அக்.24 திரு மணமான இரு மாதங்களி லேயே இளம்பெண்ணை நிர்வாண பூஜையில் பங் கேற்க வேண்டும் என கண வர் மற்றும் மாமியார் சித் தரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள் ளது.
கேரள மாநிலம் எர்ணா குளத்தில் லாட்டரி விற்று தொழில் செய்து வந்த ரோஸ் லின், பத்மா ஆகிய இரு பெண்களும் நரபலி கொடுக் கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த நரபலி கொலை யானது திருவல்லா அருகே இலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் பக வல்சிங் - லைலா இணைய ருக் காக நடந்துள்ளது. இந்த இணையர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் முகமது ஷபி என்ற மந்திர வாதியிடம் யோசனை கேட்டு இந்த கொடூரக் கொலைகளை செய்துள் ளனர்.
இந்தக் கொலைகள் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதன் தொடர்ச் சியாக கேரளாவில் இது போன்ற மாந்திரீக செயலால் பாதிக் கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை அம்பலப் படுத்தியுள்ளார்.
கேரளா மாநிலம் கொல் லம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சத்திய பாபு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் களுக்கு திருமணமான இரு மாதத்திலேயே இவரது கண வரும், மாமியாரும் பெண் ணின் உடலில் தீய சக்தி இருப்பதாகக் கூறி மந்திர வாதியிடம் அழைத்து சென் றுள்ளனர்.
அந்த மந்திரவாதி பூஜை செய்வதாகக் கூறி மாந்திரீக நடவடிக்கை செய்ததுடன் இளம் பெண்ணை ஆடை களை களைந்து நிர்வாண பூஜையில் பங்கேற்க வேண் டும் என்று கூறியுள்ளார். இதை செய்யுமாறு கணவர் சத்தபாபுவும், பெண்ணின் மாமியார் லைஷாவும் கட் டாயப்படுத்தியுள்ளனர். நிர் வாண பூஜையில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த இளம் பெண்ணை கணவரும், மாமியாரும் சேர்ந்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர். இது போன்ற பூஜைகளுக் காக தன்னை கணவரும் மாமியாரும் தமிழ்நாட்டின் நாகூர், ஏர்வாடி போன்ற பகுதிகளுக்கும் அழைத்து சென்றதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment