‘ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக கூட்டங்களை நடத்த திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

‘ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக கூட்டங்களை நடத்த திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

திருப்பூர், அக்.27- திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 26-10-2022 புதன் மாலை 6.30 மணியளவில் திருப்பூர் பெரியார் புத்தகக் கடையில் நடைபெற்றது. 

கலந்துரையாடலில், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராமபிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக கூட்டங்களை பொதுவெளியில்  நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும்,

திருப்பூர் கழக மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம் உள்ளிட்ட (4) சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள் தோழமை இயக்கத்தினர் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந்தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வது எனவும்  டிசம்பர்-2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவிலும், டிசம்பர்-17 திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் குடும்பத்துடன்  பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யபட்டது.

மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, குணசேகரன், நளினம் நாகராஜ், ஆட்டோ தங்கவேல், வேலுச்சாமி, முத்து, மாநகர செயலாளர் கருணாகரன், மைனர், குமார் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்திட உழைப்போம் என உற்சாக மாக உரையாற்றினார்.

No comments:

Post a Comment