சென்னை, அக்.18 பள்ளிக் கல்வியில் கற்றல் திறனை மேம்படுத்த புத்தாக்கமான தொழில் நுட்பங்களை பயன் படுத்தி குழந்தையின் உடல், மன, சமூக, உணர்ச்சி, நினை வாற்றலை வளர்த்தல் மூலம் அவர்களை தொலை நோக்கு பார்வையுடைவர்களாக மாற்றும் பயிற்சி திட்டத்தை லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
முழுமையான கற்றல், கல்வியில் சிறந்து விளங்குதல், தொழில் முனைவு, முக்கிய மதிப்புகள், 21ஆம் நூற்றாண்டின் சிந்தனைத் திறன், தொழில் நுட்பத் தலைமையை வளர்த்தெடுத்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதோடு, தற்போது 1000 பள்ளிகளை தொலைநோக்கு பள்ளிகளாக மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது என இதன் நிறுவனர் ஜோதி கே ஹட்டி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment