தமிழ்நாட்டில் மேலும் 271 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

தமிழ்நாட்டில் மேலும் 271 பேருக்கு கரோனா

சென்னை, அக்.18 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 271- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று பாதிப்பு 271- ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் மேலும் 271 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 66 பேர், செங்கல்பட்டில் 23 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 286 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment