சென்னை,அக்.18- தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்யத்தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட் டுள்ளதாவது, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்தேர்வர் களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்சென்னை பழைய வண்ணநகர் சர். தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இயங்கும் பயிற்சி மய்யங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ பிரிவில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான 161 காலி இடங்களைஅமைச்சுப் பணி, நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்களை கொண்டு பணிமாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கும் இந்த மய்யங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்து, பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஷ்ஷ்ஷ்.நீவீஸ்வீறீsமீக்ஷீஸ்வீநீமீநீஷீணீநீலீவீஸீரீ.நீஷீனீ என்ற இணையத்தில்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன், சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மய்ய அலுவலகத்தில் அக்.26ஆம் தேதி வரைநேரடியாக வழங்கலாம். நீமீநீநீஸீணீஸீபீணீஸீணீனீ@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment